Posts

Showing posts from February, 2022

தாசில்தார் சுமதி தலைமையில் பிண்ணணூர் கிராமத்தில் ஆக்கிரமிப்பு அகற்றம்

Image
சேலம் மாவட்டம்  தலைவாசல் வட்டம்  பிண்ணனூர் கிராமம்,சர்வே எண்- 111/1  விஸ்தீரணம்  3.81.5 ஹெக்டேர் அரசு புறம்போக்கு தரிசு வாரி என வகைப்பாடு செய்யப்பட்ட நிலத்தில் சுமார் 0.40.5 ஏர்ஸ் பரப்பளவில் பருத்தி பயிரிடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்தது.  மேற்படி ஆக்கிரமிப்பு தலைவாசல் வட்டாட்சியர் திருமதி சுமதி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது  இந்நிகழ்வில் மண்டல துணை வட்டாட்சியர்  ஜெயக்குமார் வீரகனூர் வருவாய் ஆய்வாளர் அழகேசன் கவர்பனை கிராம நிர்வாக அலுவலர்  கலியமூர்த்தி கிராம உதவியாளர் ர.ராமசாமி ஆகியோர்  ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தலைவாசல் தாசில்தார் சுமதி தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது.

Image
சேலம் மாவட்ட ம் தலைவாசல் வட்டம்  கிழக்கு ராஜாபாளையம் கிராமம் சர்வே எண்- 99/1 விஸ்தீரணம்  0.97.5 ஹெக்டேர்அரசு புறம்போக்கு ஓடை என வகைப்பாடு செய்யப்பட்ட நிலத்தில் சுமார் 0.06.0 ஏர்ஸ் பரப்பளவில் தீவன சோளம் பயிரிடப்பட்டு ஆக்கிரமிப்பில் இருந்தது.  மேற்படி ஆக்கிரமிப்பு தலைவாசல் வட்டாட்சியர் திருமதி சுமதி அவர்களின் தலைமையில் ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டது. இந்நிகழ்வில் வருவாய் ஆய்வாளர் அழகேசன் கிராம நிர்வாக அலுவலர்  தாஜிதீன் கிராம உதவியாளர் ராமசாமி  மற்றும் தொடர்புடைய அலுவலர்கள் ஆக்கிரமிப்பு பணியில் ஈடுபட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது

சேலம் மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாம்

Image
சேலம் மாவட்டம் குமாரசாமிபட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில்  27/02/2022 அன்று நடைபெற்ற பல்ஸ் போலியோ சொட்டு மருந்து சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கார்மேகம் அவர்கள் தொடங்கி வைத்தார். இந்நிகழ்வில் மாநகராட்சி ஆணையர் கிறிஸ்துராஜ் துணை இயக்குனர்கள் (சுகாதாரப் பணி) மருத்துவர்கள் நளினி,ஜெமினி மாநகர நகர நல அலுவலர் யோகானந்த் ஆகியோர் முகாமில் பங்கு பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.