Posts

Showing posts from November, 2023

முதலில் ஆளுநர் யார்? பணி என்ன தெரியுமா? சட்டசபை கூட்டம் செல்லுமா என ஏன் கவலை? வெளுத்த உச்சநீதிமன்றம்!

Image
பஞ்சாப் மாநில சட்டசபை கூட்டத் தொடர் செல்லுமா? செல்லாது என்பது ஆளுநர் பன்வார்லால் புரோஹித்துக்கு தொடர்பே இல்லாத விவகாரம். பஞ்சாப் மாநில சட்டசபை கூட்டம் செல்லும். பஞ்சாப் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட மசோதாக்களுக்கு ஆளுநர் முடிவெடுக்க வேண்டும். ஆளுநர் என்பவர் ஜனாதிபதியால் மாநில தலைவராக பெயரளவுக்கு நியமிக்கப்படுவர் மட்டுமே என உச்சநீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. பஞ்சாப் மாநில ஆளும் ஆம் ஆத்மி அரசு நிறைவேற்றிய மசோதாக்களுக்கு ஒப்புதல் தர மறுத்த மாநில ஆளுநர் பன்வாரிலால் புரோஹித், சட்டசபை கூட்டத் தொடர் செல்லாது என கடிதம் அனுப்பி இருந்தார். பஞ்சாப் மாநில ஆளுநரின் இத்தகைய போக்குக்கு எதிராக மாநில அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. பஞ்சாப் மாநில அரசின் வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், நீதிபதிகள் பர்திவாலா, மனோஜ் மிஸ்ரா பெஞ்ச் கூறியதாவது: பஞ்சாப் மாநில சட்டசபை கூட்டம் செல்லுமா? செல்லாதா? என ஆளுநர் அக்கறைப்பட வேண்டியது இல்லை. பஞ்சாப் சட்டசபை கூட்டத் தொடர் செல்லும் தான். பஞ்சாப் மாநில அரசு சட்டசபை...

சேலம் மாவட்ட ஆட்சியர் திறந்தவெளி மைதானங்களில் அமைக்கப்பட்டுள்ள பட்டாசு கடைகளை ஆய்வு செய்தார்

Image
தீபாவளி பண்டிகையையொட்டி சேலம் புதிய பேருந்து நிலையம் மற்றும் பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ள திறந்தவெளி மைதானத்தில் அமைப்பட்டுள்ள தற்காலிக பட்டாசு விற்பனைக் கடைகளில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கார்மேகம்  ஆய்வு மேற்கொண்டார்.  ஆய்விற்கு பின் மாவட்ட ஆட்சித் தலைவர்  செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது. தீபாவளி பண்டிகையையொட்டி பட்டாசுகளால் விபத்துகள் ஏற்படாத வகையில் பாதுகாப்பான முறையில் பட்டாசு கடைகளை அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள தமிழ்நாடு அரசின் அறிவுறுத்தலுக்கிணங்க சேலம் மாவட்டத்தில் திறந்தவெளி மைதானங்களில் பொதுமக்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பட்டாசு கடைகள் நடத்திட நடவடிக்கை கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அந்த வகையில் பட்டாசு கடைகளில் மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு கள் குறித்து இன்றைய தினம் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. சேலம் மாநகர பகுதியில் மாநகர காவல் ஆணையர் அவர்களாலும், புறநகர் பகுதிகளில் மாவட்ட வருவாய் அலுவலராலும் தற்காலிக பட்டாசு கடைகளுக...

பொது விநியோக திட்டப் பொருட்களை கடத்த பயன்படுத்தப்பட்ட வாகனங்கள் பொது ஏலம்.

Image
மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா தகவல் பொதுவிநியோகதிட்டப்பொருட்களை கடத்தபயன்படுத்தப்பட்டவாகனங்கள் பொது ஏலம் விடப்படுகிறது. இதுகுறித்து மாவட்டவருவாய் அலுவலர் மேனகா தெரிவித்துள்ளதாவது : சேலம் மாவட்டத்தில் பொது விநியோக திட்டப் பொருட்கள் கள்ளத்தனமாக கடத்த பயன்படுத்தப் பட்டபோது அத்தியாவசியப் பண்டங் கள் சட்டம் 1955-இன்கீழ் 6(A ) வழக்கு களில் வாகனங்கள் கைப்பற்றப் பட்டுள்ளன. இவ்வாகனங்களை மாவட்ட நிலை யிலேயே இறுதி செய்ய வழி காட்டு நெறிமுறைகள் வழங்கப்பட்டதன் அடிப்படையில் கைப்பற்றப் பட்ட 47 வாகனங்களுக்கு அபராதம் விதித்து இறுதிஆணைபிறப்பிக்கப்பட்டுள்ளது.  மேற்படி கைப்பற்றப்பட்ட வாகன உரிமையாளர்கள் வாகன அபராதத் தொகையினை செலுத்தி வாகன -த்தை பெற்றுக்கொள்ள முன் வராத காரணத்தால் 47 வாகனங்கள் 10.11.2023 அன்று காலை 10.30மணிக்கு சேலம் மாவட்ட வழங்கல் அலுவலர் மற்றும் சேலம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய் வுத் துறை காவல் துணை கண்காணிப்பாளர் முன்னிலையில் சேலம் மேற்கு வட்டம், சர்க்கார் கொல்லப்பட்டி மருத்துவ கல்லூரி எதிரில் அமைந்துள்ள சேலம் குடிமைப்பொருள் வழங்க...