Posts

Showing posts from February, 2024

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு

Image
நிலவாரப்பட்டியில் ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்கள்.  சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டி யில் வருகின்ற 27.02.2024 அன்று ஜல்லிக்கட்டு நடைபெறவுள்ளதை யொட்டி, ஜல்லிக்கட்டு போட்டி நடை பெறும் இடத்தினை மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி,  (25.02.2024) நேரில் பார்வையிட்டு ஆய்வு  மேற்கொண்டார்கள்.  இந்த ஆய்விற்குப்பின், மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்ததாவது: சேலம் மாவட்டம், பனமரத்துப்பட்டி ஊராட்சி ஒன்றியம், நிலவாரப்பட்டி யில் வருகின்ற 27.02.2024 செவ்வாய் க்கிழமை அன்று ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ளது. இப்போட்டிகள் நடைபெறும் இடங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் பாதுகாப்பு பணிகள் குறித்து வருவாய் துறை, பொதுப் பணித் துறை, காவல்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, ஜல்லிக்கட்டு கண்காணிப்புக் குழுவினர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.  இந்த ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்துவதற்கான தடுப்பு வேலிகள்,...

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

Image
2024 - நாடாளுமன்ற தேர்தலை யொட்டி தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித் தலைவர் பிருந்தாதேவி தலைமை யில் ஆலோசனைக் கூட்டம் சேலம் மாவட்ட ஆட்சியரகத்தில்  (24.02.2024)  இன்று நடைபெற்றது.  தலைமைத் தேர்தல் ஆணையர் அவர்கள் தலைமையில் நாடாளுமன்ற தேர்தல் -2024 தொடர்பான ஆலோசனைக் கூட்டம் அனைத்து மாவட்ட தேர்தல் அலுவலர்கள், மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாநகர காவல் ஆணையர் உள்ளிட்ட தொடர்புடைய அலுவலர்களுடன் நேற்றைய  தினம் சென்னையில் நடைபெற்றது.   அதனைத் தொடர்ந்து சேலம் மாவட்டத் ல் நாடாளுமன்ற தேர்தல்- 2024 தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து வாக்காளர் பொறுப்புஅலுவலர்கள், உதவி வாக்காளர் பொறுப்பு அலுவலர்கள், உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்ட சேலம் மாவட்டத்திற்கான  16 தேர்தல் பொறுப்பு அலுவலர்களுடன் ஆலோசனைக் கூட்டம்  மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர்  பிருந்தாதேவி  தலைமையில் நடைபெற்றது.  தேர்தல் பொறுப்பு அலுவலர்கள் தேர்தல் நடத்த...