செல்வமும் புனித குரானும்

 
அரபு நாட்டில் ஷேக் ஒருவர் மிகப் பெரும் செல்வந்தர் அவருக்கு  மனைவி குழந்தைகள்என்று யாரும் இல்லை.பரோபகாரி
ஒரு ரமளான்   ஈத்    பெருநாளன்று, தன்னிடம் வேலை பார்க்கும் தொழி லாளர்களுக்கு மிக சிறந்த விருந்து ஏற்பாடு செய்து அவரே முன்னின்று அனைவரையும் உபசரிக்கிறார்..
விருந்து முடிந்தவுடன் ஒவ்வொருவரு டைய   இருக்கைக்கு   முன்.  இரண்டு பெரிய வண்ண கவர்கள் வைக்கப்பட் டுள்ளன.    ஒன்றில்   பணம்   என்றும் மற்றொன்றில்புனிதகுர்ஆன் என்றும் எழுதி வைக்கபட்டுள்ளது..

நண்பர்களே, நீங்கள் எனக்காக உண் மையாக     உழைக்கிறீர்கள்  உங்கள் வேலைக்கேற்ற   அல்லது    அதற்கும் அதிகமாகவே உங்களுக்குசம்பளமும் கொடுத்து வந்துள்ளேன்என்னுடைய  இந்த செல்வம் இறைவனால் அருளப் பட்டது. என்னுடைய செல்வத்தை எவ் வாறு செலவழித்தேன் என்றுஇறைவ -னுக்கு பதில்சொல்ல கடமைபட்டுள் ளேன்.

உங்கள் முன் இரண்டு கவர்கள் உள் ளன.ஒன்றில் பணம், மற்றொன்றில் புனித குர்ஆன்    இதில்       ஏதாவது ஒன்றை நீங்கள் தேர்ந்தெடுக்கலாம்...

முதலாமவர்  தயங்கியவாறே  ஷேக் கிடம் சொன்னார்... முதலாளி, புனித குர்ஆனை     மதிக்கிறேன்.  ஆனால் இப்போதைக்கு, நோய்வாய்பட்டிருக் -கும்   என்.  தாய்க்கு  நல்ல  சிகிட்சை அளிக்க வேண்டும்.   அதற்கு   பணம் வேண்டும்.. பணம் என்று எழுதப்பட்ட கவரை எடுத்து கொண்டார்.

அடுத்தவர்,   என்- ஓலை - குடிசைக்கு பதில், சின்னதாக ஒரு கல் வீடு   கட்ட வேண்டும்.  இந்த   பணம்   இருந்தால் என் கனவுவீடு கட்டமுடியும்பணத்தை  எடுத்து கொண்டுமுதலாளிக்குநன்றி  சொல்லி நகர்ந்தார்...

இப்படியே அடுத்தடுத்து ஒவ்வொருவ -ரும்    ஒவ்வொரு    காரணங்களோடு பண த்தை எடுத்து கொண்டனர்.

கடைசியாக, முதலாளியின் தோட்டத் தில் உள்ள கால்நடைகளை பராமரி க்கும் வாலிபனுடைய முறை.
அவன் பரம ஏழை. வயதான தாய். மனைவி மற்றும் பிள்ளைகள்...

அவன்பணத்தின் தேவைஅறிந்தவன் அவனும் பணம் உள்ள கவர் அருகில் சென்று,     அதை    எடுத்து    கையில் வைத்து   கொண்டு    முதலாளியிடம் என்னுடைய தேவைக்கு நான் எப்போ து கேட்டாலும் நீங்கள்தரத்தான்போகி றீர்கள்.. மேலும் என் அம்மா அடிக்கடி சொல்வார்கள்,    ஏழ்மை..   என்பதும்
இறைவனால் அருளப்பட்டதே...   நம் தேவைகளை  நிறைவேற்றுபவனாக எல்லாம் வல்ல இறைவன்  இருக்கின் றான்... மேலும்,  எங்கள்  வீட்டில்  ஒரு பழக்கம்...தினசரி, அதிகாலை தொழு கைக்கு பிறகும்,  மாலையில்   அந்தி சாயும் நேரத்து தொழுகைக்கு பிறகும் என் அம்மா குர்ஆன் ஓதி அதன் அர்த் -தம் சொல்லுவார்கள். நாங்கள் சுற்றி அமர்ந்து அதை செவிமடுப்போம்...

என்று சொன்ன அந்த வாலிபன் எடு த்த பண கவரை எடுத்தஇடத்திலேயே வைத்து விட்டு நான் இந்த புனித குர் ஆனையே தேர்ந்தெடுக்கிறேன்என்று அதை எடுத்தான்.

சம்பவம் இதோடு முடியவில்லை நண்பர்களே,

புனிதகுர்ஆன் இருந்த பெரும்கவரை  எடுத்தவன், முதலாளியிடம் நன்றி சொன்னவன்.அதை திறந்து பார்க்கிறான்.ஆச்சர்யம்........................

குர்ஆன் இருந்த கவருக்குள் மேலும் இரண்டு கவர்கள்..ஒன்றில், பணமும் மற்றொன்றில்  செல்வந்தரின் சொத் துக்களின் ஒரு பகுதியை  தானமாக எழுதி கையெழுத்திட்ட பத்திரம்... யாருக்கு என்ற பெயர் மட்டும் எழுதப்படாமல் இருந்தது....

அந்த வாலிபன் மட்டும் இல்லை,, ஏனைய தொழிலாளர்களும் அதிர்ந்து போயினர்...

செல்வம் நிலையானது அல்ல... இன்றைய நிலை அப்படியே தலைகீழாக மாறும், இறைவன் நினைத்தால்...

மனிதர்களை செல்வத்தை கொண் டும் சோதிப்போம் என்ற இறைவனின் கூற்று எப்படி பொய்யாக முடியும்...
வாலிபன்  தாய் சொன்னதை நம்பி னான்... ஆம், அவள் சொல்லி கொடு த்தார்..... இறைவனையே நம்பு.. அவ னிடமே உன் தேவைகளை கேள்........ அள்ள அள்ள குறையாதசெல்வத்தை அவன் வழங்குவான்.............அசைக்க முடியாத   "இறை நம்பிக்கை    என்ற செல்வம்" மற்ற   செல்வங்களிலெல் லாம் சிறந்த செல்வம் அல்லவா..
தமிழ் மாநில செய்திகளுக்காக
செய்தி ஆசிரியர் ஆத்தூர்.ர.மாலிக்

Comments

Popular posts from this blog

Gaza war: சமூக வலைதளத்தை ஆக்கிரமித்த ‘ALL EYES ON RAFAH' போஸ்டர்!

யார் அவர்?

ربَّنَا هَبْ لَـنَا مِنْ اَزْوَاجِنَا وَذُرِّيّٰتِنَا قُرَّةَ اَعْيُنٍ وَّاجْعَلْنَا لِلْمُتَّقِيْنَ اِمَامًا‏