⚖  சட்டம் அறிந்துகொள்வோம்! ஒரு சமூகப் பார்வைக்கு


ஒரு கொலையை நேரில் பார்த்ததாக ஒருவர் காவல்நிலையத்திற்கு நேரில் வந்து புகார் கொடுக்கிறார்.

 அந்த புகார் பிடியானையின்றி கைது செய்யப்படக்கூடிய குற்றம் என்பதால் crpc sec154 ன் படி ipc 302 கீழ் முதல்தக வல் அறிக்கையாக பதிவுசெய்யப்படு கிறது.

உடனடியாகமுதல் தகவல் அறிக்கை யின் ஒரு நகல் புலன்விசாரனைஅதி காரிக்கு புலன்விசாரனைக்காக அனு ப்படுகிறது.

புலன் விசாரனைஅதிகாரிCRPC sec 157-ன் கீழ் புலன்  விசாரனை செய்ய அதிகாரம் பெற்று இருப்பதால் சம்பவ இடத்திற்குஉடனடியாக செல்கிறார். மாதிரி வரை படம்  வரைகிறார் கை பற்றுதல்  மகஜர்  தயார்  செய்கிறார். சாட்சிகள் முன்னிலையில பஞ்சாயத் தார்கள் முன்னிலையில் பிரேத விசாரனை மேற்கொள்கிறார்.
(CRPC 174)
சாட்சியங்களை முன்னிலைபடுத்துகி றார்.(CRPC.sec 160) விசாரித்து வாக்கு மூலங்களை பதிவு செய்கிறார் CRPC  161). அதன்  பின்பு. பிரேதத்தை சடல கூராய்வுக்குஅனுப்புகிறார்.

குற்றவியல் நீதித்துறை நடுவருக்கு அறிக்கை அனுப்புகிறார்(Prliminary report sec 158 crpc)காவல் நிலையத் தில் general diary பராமறிக்கிறார்
(Sec 44 of tamil naduPolice Act)

புகாரின் அடிப்படையில்குற்றவாளி எனசந்தேகிக்கும்நபரை கைது செய் கிறார்(Crpc 41 &42)
கைது செய்யப்பட்டநபரிடம் ஒப்புதல்
வாக்குமூலம் வாங்குகிறார் கொலை க்கு பயன்படுத்தியதாக கருதக்கூடிய 
ஆயுதங்களை கைபற்றுகிறார் Eviden ce  act 27)புலன் விசாரனையை case dairy ஆக பராமறிக்கிறார் (sec 172 crpc).
புலன் விசாரனை முடித்து குற்றபத் திரிக்கை நீதிமன்றத்தில் தாக்கல் செய்கி றார் (crpc sec 173) நடுவர் நீதிமன்றம் குற்றம் சாட்டபட்டவரை (crpc  sec167 ) நீதிமன்ற காவல் அடைப்பு செய்து வழக்கை sec190 crpc படி கோப்பிற்கு  எடுத்து  குற்றம் சாற்றபட்டவருக்கு குற்ற பத்திரிக்கை நகலை கொடுக்கிறது. (crpc sec 207 & 208 ) மேற்படி  குற்றம் செசன்ஸ் நீதி மன்றத்தால் விசாரிக்க தக்கது என்பதால் செசன்ஸ் நீதிமன்றத் திற்கு வழக்கு விசாரனைக்கு அனுப்புகிறது.(Crpc  sec209 )செசன்ஸ் நீதி மன்றம் குற்றசாட்டை வனைந்து  sec 228 crpc குற்றம் சாட்டபட்டவரிடம் குற்ற சாட்டை பற்றி கேள்வி கேட்கிறது. 

குற்றவாளி  குற்றம் செய்யவில்லை தான் அப்பாவிஎன்று தெரிவித்ததின்
அடிப்படையில்எதிரி crpc sec 303 -படி  வழக்கறிஞர்நியமித்து கொண்டதும்
வழக்கு அரசு தரப்பு வழக்கறிஞரால்
sec 226 crpc படி துவங்கப்பட்டுவழக்கு விசாரனைஎதிரியின்முன்னிலையில் sec 273 of crpc -படிநடைபெற்று சாட்சி யங்கள் விசாரனை(sec 137 &138 evidence  Act)  செய்யப்பட்டு  சாட்சியங்கள் sec 276 crpc படி செசன்ஸ் நீதிபதியால் பதிவு செய்யப்பட்டு sec 272 crpc  படி நீதி மன்ற மொழி பயன்படுத்தப்பட்டு
குறுக்கு விசாரனைக்கு வாய்பளிக்க ப்பட்டு   எதிரியிடம்  sec 313 crpc  கீழ் கேள்வி  கேட்டுஎதிரி பக்கம் சாட்சிய ங்கள் இல்லை என்பதால்  இரு தரப்பு வாதங்களை  கேட்டு  இறுதியில் 
குற்றம் (sec 314 crpc) சாட்டப்பட்டவர் இந்த கொலை  குற்றத்தை  செய்தார்  என அரசு  தரப்பு  போதுமான  ஆதாரங்களோடு சந்தேகத்திற்கு இடமில்லாமல் நிருபிக்க தவறி விட்டது என்பதால் சந்தேகத்தின் பலனை எதிரிக்கு அளித்து குற்றம் சாட்டப்பட்டவரை விடுதலை    (CRPC sec 232)  செய்வதாக தீர்ப்பு
வழங்குகிறார்.

Comments

Popular posts from this blog

வெள்ளிக்கிழமை நினைவூட்டல்

2024 -நாடாளுமன்ற தேர்தலையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

ஜல்லிக்கட்டுப் போட்டி நடைபெறவுள்ள இடத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் பிருந்தா தேவி நேரில் பார்வையிட்டு ஆய்வு