நபிகள் நாயகத்தை இழிவுபடுத்திவரும் பா.ஜ.க. கல்யாணராமன்… : தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவாரா?
இந்தியாவில் வெறுப்பு அரசியலை மூலதனமாகக் கொண்டு இயங்கி வரும் இந்துத்துவ சனாதனக் கூட்டம், தமிழகத்திலும்மதநல்லிணக்கத்தைச் சீர்குலைக்க தொடர்ந்துமுயற்சிக்கின் றது.கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் படுதோல்வியைச் சந்தி -த்த பா.ஜ.க. அதை சகித்துக்கொள்ள முடியாமல் தமிழகத்தில் வெறுப்பு அர -சியலை முன்னெடுக்கத் துடிக்கிறது.
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர் -த்து இலட்சக்கணக்கானஇசுலாமியர் கள் பெண்கள், வீதிக்கு வந்து போரா -டிய போது, RSS சங்பரிவாரங்கள் சிறு பான்மையினர் மீது வெறுப்பை உமிழ்ந்தனர்.
தற்போது சட்டமன்றத் தேர்தலை எதிர் நோக்கி உள்ள நிலையில், பா.ஜ.வை சேர்ந்த கல்யாணராமன்மற்றும்ஜெய் சங்கர் என்கின்ற பேர்வழிகள் கோடிக் - கணக்கான மக்கள் தன் உயிரினும் மேலாக நினைக்கும் இறைதூதர் நபி கள் நாயகத்தை பற்றி இழிவான கரு -த்துகளை பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில் பேசியிருக்கிறார்.
இந்தப் பேர்வழிகள் தந்தை பெரியா ருக்குஎதிராகவும்,திராவிடஇயக்கத்திற்கு எதிராகவும், சிறுபான்மையினர் மீது வன்மத்துடனும் தொடர்ச்சியாக சமூக வலைதளங்களில் நேரடியாகப் பேசி அவதூறு செய்து வருவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்கள்.
தமிழ்நாட்டில் மத வன் முறைகளைத் தூண்டவும், அதன் மூலம் அரசியல் லாபம் பெறலாம் என்ற நப்பாசையுட -னும் கல்யாணராமன், ஜெய்சங்கர் போன்ற இழிபிறவிகளை RSS சங்பரி வார் கும்பல் பின்னணியில் இருந்து இயக்கிக்கொண்டு இருக்கிறது.
தமிழகத்தின் பொது அமைதிக்குகேடு விளைவிக்கும் பா.ஜ.க. பிரமுகர் கல் யாணராமன்,ஜெய்சங்கர்ஆகியோரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்து,சிறையில்அடைக்கவேண்டும் அவருக்கு பக்கபலமாகப் பின்னணி -யில். இருப்பவர்களையும் இனம் கண்டு தமிழக அரசு உடனடியாக சட் -டத்தின் முன் நிறுத்தி. தண்டிக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல்
கட்சி தலைவர்களும், சமூகநல்லிண -க்கத்தினை விரும்புவோரும் கோரிக்கை வைக்கின்றனர்.
தமிழகத்தில் மதக்கலவரத்தை தூண் -டும் வகையில் தொடர்ந்து பேசிவரும் பாஜக பிரமுகர்களை தேசியபாதுகாப் -புச் சட்டத்தில் கைது செய்ய வலியு றுத்தி08/02/2021அன்றுசேலம்மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில் அனை -த்து இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் மற் -றும் இஸ்லாமிய அமைப்புகள் அரசி -யல். கட்சிகள் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
அதை தொடர்ந்து மதுரையில் கடந்த வெள்ளிக்கிழமை இஸ்லாமிய அமைப்புகளின் சார்பில் 5 இடங் களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கோவை மாவட்டம் மேட்டுப் பாளைய -த்தில் அண்மையில்நடைபெற்றகூட்ட -த்தில் பாஜக. பிரமுகர் கல்யாண ராமன் மற்றும் ஜெய்சங்கர் இஸ்லா - -மியர்களின் இறைத் தூதர் நபிகள் நாயகம் மற்றும் அவர் வாழ்ந்த விதத் தையும் குறித்து அவதூறாகப் பேசி -யதாக தமிழகம் முழுவதும் இஸ்லா -மியர்கள்.மற்றும் இஸ்லாமிய அமை ப்புகள்அரசியல்கட்சிகள்ஆர்ப்பாட்டம்
நடத்தி வருகின்றனர்.
இந்நிலையில் பாஜக நிர்வாகி கல்யா -ணராமன்,தமிழகத்தில் மதக்கலவர -த்தைதூண்டும்வகையில்தொடர்ந்து திட்டமிட்டு பேசி வருவதாகவும், தமிழ கத்தில்அமைதியைநிலை நாட்டிடவும் மதமோதல்கள் தடுக்கவும் கல்யாண ராமனை தேசியப் பாது காப்புச் சட்ட த்தில் கைது செய்யவேண்டும் என்று வலியுறுத்தி இஸ்லாமிய அமைப்பு களின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மேலும் மதுரை நெல்பேட்டை சுங்கம் பள்ளிவாசல், தெற்குவாசல் சின்ன க்கடைத் தெரு, அண்ணாநகர் பள்ளி வாசல், மகபூப்பாளையம்பள்ளிவாசல் களிமங்கலம் உள்பட 5 இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன.
இதில் மதுரை மாவட்ட முஸ்லிம் ஐக்கிய ஜமாத், பாப்புலர் ப்ரண்ட், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம், மனித நேய மக்கள் கட்சி எஸ்டிபிஐ கட்சி, நாம் தமிழர் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள், இந்திய தேசிய லீக், முஸ்லிம்லீக், விமன் இந்தியா மூவ்மெண்ட், மஜ்லிஸ் கட்சி உள்பட பல்வேறு அமைப்புகளின் நிர் வாகிகள் பங்கேற்றுப் பேசினர்.
ஆர்ப்பா ட்டங்களில் பெண்கள் உள்பட பல்லாயிரக்கணக்காணோர் இஸ்லா மியர்கள் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது


Comments
Post a Comment