தமிழக சட்ட சபை தேர்தல்: வேட்பு மனு தாக்கல் நிறைவு!
தமிழகத்தில் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12ஆம் தேதி தொடங்கியது.அன்றைய தினம் போடிநாயக்கனூர் சட்டமன்ற தொகுதியில் ஓ.பன்னீர்செல்வம் வேட்புமனு தாக்கல் செய்தார்.
முதல் நாளில் 60 பேர் மனு தாக்கல் செய்ததாக கூறப்பட்டுள்ளது. அடுத்த -டுத்த நாட்களில் திமுக தலைவர் ஸ்டாலின், மனித நேய மக்கள் கட்சி தலைவர் பேரா M.H. ஜவாஹிருல்லா அஇஅதிமுக இனை ஒருங்கினைப் பாளர் எடப்பாடி பழனிசாமி, அமமுக தலைவர் டிடிவி தினகரன், மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்உள்ளி -ட்ட முக்கிய கட்சிகளின் தலைவர்கள் வேட்புமனுத் தாக்கல் செய்தனர்.
தமிழக சட்டமன்ற தேர்தலில் போட்டி யிடுவதற்காக வேட்புமனு தாக்கல் 234 தொகுதிகளிலும் இன்று மதியம் 3.00 மணியுடன்நிறைவடைந்தது.
இதுவரை 4,544 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. அதிக பட்சமாக கரூர் தொகுதியில் 72 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர். குறைந்த பட்சமாக. விளவங்கோடு தொகுயில் 6 பேர் மட்டுமே வேட்புமனு தாக்கல் செய்துள்ளனர்.
வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நாளை 20/03/2021நடைபெற உள்ளது. இதில், தேர்தல் ஆணையத்தின் விதி முறைகளை முறையாக பின்பற்றாத வேட்பு. மனுக்கள் தேர்தல் நடத்தும் அதிகாரிகளால் நிராகரிக்கப்படும்.
இப்பணிகள் முடிவடைந்தவுடன், தேர்தலில் போட்டியிட தகுதியுடைய வேட்பாளர்கள் பெயர் வரிசைப் படுத்தப்படும்.
வேட்பு மனுவை திரும்பப்பெற வரும் 22ஆம் தேதி கடைசி நாளாகும். அன்று மாலையே வேட்பாளர் இறுதிப் பட்டியல் வெளியாக வாய்ப்புள்ளது.
Comments
Post a Comment