சேலம் மாவட்டம் ஆத்தூர் நகராட்சி சார்பாக மருத்துவ பரிசோதனை முகாம்.
தமிழகமெங்கும் கொரானா தொற்று பரவல் அதிகமாக இருக்கும் மாவட் -டங்களில் தினந்தோறும் மருத்துவ பரிசோதனை முகாம்கள் நடத்த தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பேரில் அந்தந்த மாவட்ட ஆட்சியாளர்களால்சுகாதாரத் துறைக்கு வலியுறுத்தல் செய்யப்பட்டது.
அதன் அடிப்படையில் சேலம் மாவட்ட மாநகராட்சி மற்றும் நகராட்சி ஆணையாளர்களால் தினந்தோறும் ஓவ்வொரு பகுதிகளுக்கும் பரிசோதனை முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
அவ்வப்போது ஆத்தூர் நகராட்சி ஆணையாளர் திருமதி தேவி அவர்களின் அறியுறுத்தலின்படி சேலம்மாவட்டம் ஆத்தூரில்21/06/2021 இன்று கரிகாலன் தெரு முல்லைவாடி அவ்வையார் தெரு, நாரயணபுரம் , ஆகிய பகுதிகளில் இன்று Real-Time RT PCR, rapid antigen test , and rapid antibody test Test for COVID-19.ஆகிய பரிசோதனைகள் நடைப்பெற்றது.
இப்பரிசோதனை முகாமில் நகராட்சி சுகாதார அலுவலர் திருமூர்த்தி சுகாதார ஆய்வாளர்கள் குமார் பிராபாகரன், பரிசோதனை நிபுனர் தீபாஶ்ரீ மேற்பார்வையாளர் மல்லிகா பரப்புரையாளர் மணிகண்டன் ஆகியோர் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
Comments
Post a Comment