Posts

Showing posts from December, 2021

தேனியில் தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்

Image
தேனியில் தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர்  கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் 30/12/201 அன்று தேனி பங்கள மேட்டில் நடைபெற்றது.  தமிழ்நாடு அனைத்து மருந்தாளுநர் நல கூட்டமைப்பு மாநில மையம் சார்பில் தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்கும். விதமாக  தமிழகம் முழுவதும் மாவட்ட தலைநகரங்களில் பட்டயமருந்தாளுநர்  களின் வேலை வாய்ப்புஉரிமையினை பறிப்பதை கைவிட கோரி கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில்  மாநிலத் தலைவர் நாகராஜ் மாநில பொருளாளர் நாகேந்திரன் ஆகியோர் தலைமையில் தேனி பங்கள மேட்டில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மருத்துவத் துறையில் இருக்கின்ற மருந்தாளுநர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்பகோரியும்,பட்டயமருந்தாளுனர் களுக்கு  வேலை வாய்ப்பினைவழங்க கோரியும்,பட்டய மருந்தா ளுநர்களின் வேலை வாய்ப்பு உரிமையை பறிப்பதை கைவிடக் கோரியும், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பட்டய மருந்தாளுநர் களுக்கு அமுல்படுத்திய  நீதிமன்ற தீர்ப்பினை தமிழகத்திலும் அமுல் படுத்தக்கோரியும், மருத்துவத...

தேனி மாவட்டத்தில் ஒக்கலிக கவுடர் சங்கத்தின் சார்பில் பரிசளிப்பு மற்றும் பாராட்டு விழா

Image
தேனி மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் சார்பில் பிளஸ்-2 மற்றும் மருத்துவ மாணவ, மாணவிகளுக்கான பரிசளிப்பு மற்றும் ஒக்கலிக சமுதாயத்தை சேர்ந்த பல்வேறு துறைகளில் சாதனை புரிந்தவர்களுக்கான பாராட்டு விழா தேனி அருகே உள்ள பழனி செட்டிபட்டி சந்திர பாண்டியன் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.  இவ்விழாவுக்கு தமிழக ஒக்கலிக கவுடர் மகாஜன சங்கத்தின் மாநில தலைவர் வெள்ளிங்கிரி தலைமை தாங்கினார். தமிழ்நாடு கல்வி காப்பு அறக்கட்டளை நிர்வாக அறங்காவலர் முருகேசன், அறங்காவலர் ரகுபதி, தேனி மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க கௌரவ தலைவர் மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவுக்கு வந்த அனைவரையும் தேனி மாவட்ட ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க தலைவர் பிரகாஷ் வரவேற்றார். விழாவின்போது தேனி மாவட்ட ஒக்கலிக மகாஜன சங்க செயலாளர் விஸ்வநாதன் சங்கத்தின் செயல் பாடுகள் குறித்த அறிக்கையையும், பொருளாளர் மும்மூர்த்தி நிதிநிலை அறிக்கையையும் வாசித்தனர். விழா முடிவில் பெரியகுளம் ஒன்றிய ஒக்கலிக கவுடர் மகாஜன சங்க கௌரவ தலைவர் ரவிச்சந்திரன் நன்றி கூறினார் இவ்...

தேனியில் ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயல் வீரர்கள் கூட்டம்

Image
தேனி: தேனி மாவட்ட ஆதித்தமிழர் கட்சி மாவட்ட செயல்வீரர்கள் கூட்டம் தேனி அருகே உள்ள கருவேல்நாயக்கன்பட்டி தனியார் மஹாலில் நடைபெற்றது. இக் கூட்டத்திற்கு மேற்கு மாவட்ட செயலாளர் முல்லை அழகர் தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட தலைவர் ராமசாமி முன்னிலை வைத்தார்.  கூட்டத்துக்கு வந்த அனைவரையும் கிழக்கு மாவட்ட செயலாளர் காமராஜ் வரவேற்றார். கூட்டத்தில் மாநில தலைமை நிலைய செயலாளர் விஸ்வைகுமார், மாநில அமைப்பு செயலாளர் திலீபன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கட்சியின் வளர்ச்சி குறித்து பேசினார்கள். இந்த கூட்டத்தில்தமிழகத்தில் கடந்தமூன்றுமாதங்களில்தொடர்ந்து  அருந்ததியர் இன மக்களை தாக்கி வருவதை தடுக்க  தமிழக முதல்வர்  தனி கவனம் செலுத்தப்படவேண்டும். மேலும் சாதிஆணவக்கொலைகளை  தடுக்க தமிழக முதல்வர் தனி சட்டம் இயற்றி பாதுகாத்திட வேண்டும் என்றும், ஆதி தமிழர் கட்சியின் வளர்ச்சி குறித்தும்  , ராஜீவ்காந்தி கொலை வழக்கில் சிறைக் கைதி களாக உள்ளவர்கள்அனைவரையும்  விடுதலை செய்ய வேண்டும் என பல...

பெற்றோரது ஆண்டு வருமான உச்சவரம்பினை ரூ.2,00,000/- லிருந்து ரூ.2,50,000/- ஆகஉயர்வு அரசு ஆணை ஆட்சியர் தகவல்

Image
                                                                 சேலம்: பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2,50,000/-ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்த ப்பட்டோர் மற்றும் சீர்மரபினர்மாணவ மாணவியருக்கு வழங்கப்படும் கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கான பெற்றோரது ஆண்டு வருமான உச்ச வரம்பினை ரூ.2,50,000/-ஆக உயர்த்தி அரசால் ஆணையிடப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்டஆட்சித்தலைவர் கார்மேகம் தெரிவித்துள்ளதாவது 2021 -2022 ம் ஆண்டு முதல் அரசு, அரசு உதவி பெறும் கல்வி நிறுவன ங்கள் மற்றும் தனியார் தொழிற் கல்லூரி களில் அரசு ஒதுக்கீட்டின் கீழ் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படு த்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் மாணவ, மாணவியர...