Posts

Showing posts from October, 2023

ஆயிஷாவின் மகனான முத்துராமலிங்க தேவர்.. இந்து - முஸ்லிம் மாமன் மச்சானாக வாழும் தமிழ்நாட்டின் வரலாறு

Image
ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் இன்று முத்து ராமலிங்க தேவரின் குருபூஜை மற்றும் ஜெயந்தி விழா நடைபெற உள்ள நிலையில், இந்து - முஸ்லிம் கள் தென் மாவட்டங்களில் மாமன் மச்சான் என உறவுமுறை வைத்து அழைப்பது ஏன்? இரு சமூகத்தினரு க்கும் உள்ள ரத்த பந்தம் என்ன என்ற மதநல்லிணக்க வரலாற்றை அலசுவோம். நாடு முழுவதும் சாதி, மத, இன மோதல்கள், கும்பல் படுகொலைகள் அரங்கேறி வரும் நிலையில் அதற்கு மாற்றமாக நாட்டிற்கே ஒற்றுமை, சமூக நீதி பாடத்தை போதித்து வருகிறது தமிழ்நாடு. தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா போன்ற சமூக நீதி தலைவர்களின் போராட்டங்களால் தமிழ்நாடு இன்று சாதி, மத பேதமற்ற சமூக நீதி மண்ணாக திகழ்ந்து வருகிறது. கோவை போன்ற இடங்களில் மத ரீதியான மோதல்கள் ஏற்பட்டாலும் டெல்டா மாவட்டங்களும் தென் மாவட்டங்களும் இந்து முஸ்லிம் ஒற்றுமை புகழிடங்களாக உள்ளன. இந்த மாவட்டங்களில் முக்குலத்தோர் என்று அழைக்கப்படும் கள்ளர், மறவர், அகமுடையார் ஆகிய மூன்று சமூகங்களை சேர்ந்தவர்களும் இஸ்லாமியர்களும் மாமா, மச்சான், மாப்பிள்ளை என உறவு முறை வைத்து அழைத்துக் கொள்கின்றனர். குடும்ப நிகழ்வுகள், கோயில் திர...

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்

Image
சென்னை எழும்பூரில் முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை க்கான கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வலியுறுத்தி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்! முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலைக்கான கோப்பிற்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் சென்னை எழும்பூரில் தமுமுக தலைவர் ஜவாஹிருல்லா  தலைமையில் 28/10/2023 அன்று நடைபெற்றது முஸ்லிம் சிறைவாசிகள் உள்ளிட்ட 49 ஆயுள் சிறைவாசிகளை முன் விடுதலை செய்ய பரிந்துரைத்து தமிழ்நாடு அரசால் கடந்த ஆகஸ்ட் 24 அன்று ஆளுநருக்கு கோப்பு அனுப்பப்பட்டது.  இரண்டு மாதங்கள் கடந்துள்ள நிலையில் தமிழ்நாடு ஆளுநர் ரவி அக்கோப்பிற்கு ஒப்புதல் அளிக்காமல் உள்ளார். . இந்த முற்றுகை போராட்டத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல். திருமாவளவன் எம்.பி. தமிழகவாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன் எம்.எல்.ஏ. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்...

பொதுத்துறை ஊழியர்களுக்கு தீபாவளி ‘ஜாக்பாட்’: 20% போனஸ் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்!

Image
போக்குவரத்து கழகம், மின்வாரியம் உள்ளிட்ட பொதுத்துறை ஊழியர்களு -க்கு 20 சதவீத போனஸ் அறிவிப்பு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு பொதுத்துறை நிறுவனத்  தொழிலாளர்களுக்கு தீபாவளி போனஸை தமிழக அரசு அறிவித்துள்ளது தீபாவளியை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு 2022-23 ஆம் ஆண்டுக்கான அரசு நடத்தும் பொதுத்துறை நிறுவனங்களில் (PSUs) தகுதியுள்ள 2.83 லட்சத்துக்கும் அதிகமான ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் கருணைத் தொகையை வியாழக்கிழமை அறிவித்தது. மாநில கருவூலத்திற்கு ₹402.97 கோடி செலவாகும். டாங்ஜெட்கோ, பல்வேறு அரசுப் போக்குவரத்துக் கழகங்கள் மற்றும் தமிழ்நாடு சிவில் சப்ளைஸ் கார்ப்பரேஷன் ஆகியவற்றின் தகுதியான பணியாளர்களுக்கு 8.33% போனஸ் மற்றும் 11.67% கருணைத் தொகை வழங்கப்படும் என்று அதிகாரப்பூர்வ செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவன ங்களின் தொழிலாளர்களுக்கு 20% போனஸ் 8.33% மற்றும் 11.67% கருணைத் தொகையும், நஷ்டத்தில் இயங்கும் பொதுத்துறை நிறுவன ங்களில் இருப்பவர்களுக்கு 10% (போனஸ் ...

பிரார்த்தனை கூட்டத்தில் வெடி விபத்து அல்ல குண்டு வெடிப்பு:களமச்சேரியில் நடந்த குண்டு வெடிப்பு

Image
பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்ததாக தகவல்; குண்டு வெடிப்பா? அல்லது வெடி விபத்தா? என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில் கேரள மாநிலம் களமசேரி பகுதியில் நிகழ்ந்த வெடி விபத்து எதிரொலி யால் "கொச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விடுமுறையில் உள்ள அனைத்து மருத்துவர்களும் உடனடியாக களமசேரி மற்றும் எர்ணாகுளம் மருத்துவமனைகளுக்கு வரவேண்டும்"  என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார் பிரார்த்தனை கூட்டத்தில் வெடி விபத்து அல்ல குண்டு வெடிப்புஎன்றும் களமச்சேரியில் நடந்த குண்டு வெடிப்பு மிகவும் துரதிர்ஷ்ட வசமான நிகழ்வு என்றும் இது தொடர் பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார். உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைபேசியில் பேசி விபரங்களை கேட்டறிந்துளார். மத்திய அரசின் புலானாய்வு அமைப்புகளான NSG, NIA ஆகியவையும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் கேரளா களமசேரி குண்டுவ...