பிரார்த்தனை கூட்டத்தில் வெடி விபத்து அல்ல குண்டு வெடிப்பு:களமச்சேரியில் நடந்த குண்டு வெடிப்பு
பயங்கர சத்தத்துடன் அடுத்தடுத்து வெடித்ததாக தகவல்; குண்டு வெடிப்பா? அல்லது வெடி விபத்தா? என்ற விபரங்கள் சேகரிக்கப்பட்டு வரும் நிலையில்கேரள மாநிலம் களமசேரி பகுதியில் நிகழ்ந்த வெடி விபத்து எதிரொலி யால் "கொச்சி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் விடுமுறையில் உள்ள அனைத்து மருத்துவர்களும் உடனடியாக களமசேரி மற்றும் எர்ணாகுளம் மருத்துவமனைகளுக்கு வரவேண்டும்" என கேரளா சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் உத்தரவிட்டுள்ளார்
பிரார்த்தனை கூட்டத்தில் வெடி விபத்து அல்ல குண்டு வெடிப்புஎன்றும் களமச்சேரியில் நடந்த குண்டு வெடிப்பு மிகவும் துரதிர்ஷ்ட வசமான நிகழ்வு என்றும் இது தொடர் பான விபரங்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன என்று கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
உள்துறை அமைச்சர் அமித்ஷா, கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் உடன் தொலைபேசியில் பேசி விபரங்களை கேட்டறிந்துளார்.
மத்திய அரசின் புலானாய்வு அமைப்புகளான NSG, NIA ஆகியவையும் விசாரணை நடத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் கேரளா களமசேரி குண்டுவெடிப்பு சம்பவம்:IED வகை குண்டு (improvised Explosive Device-கையால் உருவாக்கப்பட்ட சக்தி குறைவான வெடிகுண்டு) பயன்படுத்தப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது.) வெடித்துள்ளதாக மாநில போலீஸ் டி.ஜி.பி. தகவல் அளித்துஇதன் பின்னணியில் உள்ள அனைவரையும் கண்டறிந்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பேட்டியில் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
Comments
Post a Comment